Saturday, July 25, 2009

பதிவுலகம்!

சொன்னாங்க சொன்னாங்க,
எதோ பிரச்சினையின்னுஞ்
சொன்னாங்க சொன்னாங்க!

தமிழ்மணத்துல ஓட்டையுன்னுஞ்
சொன்னாங்க, தமிலீசுல ஒடசலுன்னுஞ்
சொன்னாங்க, சொன்னாங்க!

வெவரமாச் சொல்லுன்னு சொன்னாக்க
அதுல எதோ உள்குத்துன்னுஞ்
சொன்னாங்க, சொன்னாங்க!

அவருக்கும் இவருக்கும் மோதலுன்னு
சொல்லிச் சொன்னதுல உண்மைகள்பல
சொன்னாங்க, சொன்னாங்க!

தன்னன தன்னன தானத்தன்னன
தன்னன தன்னன தன்னன
தானாதீந்தன தானாதீந்தன!

பின்னூட்டமின்னு சொன்னாங்க
மறைவுல பேசிச் செய்யுறதுன்னுஞ்
சொன்னாங்க சொன்னாங்க!

இவரு அவரோட ஆளுன்னுஞ் சொன்னாங்க
எழுதுறத நிப்பாட்டப் போறாராமுன்னுஞ்
சொன்னாங்க சொன்னாங்க!

ஆனாப் போன மச்சாஞ் திரும்பி
வந்து கும்மியடிக்கத்தான் போறாருன்னுஞ்
சொன்னாங்க சொன்னாங்க!

நாம எல்லாம் ஒரே குடும்பமுன்னு
ஆரத்தழுவி ஆறுதலுஞ் சொல்லிச்
சொன்னாங்க சொன்னாங்க!

பார்ப்பானுன்னுஞ் சொன்னாங்க கேலியுஞ்
செஞ்சாங்க ஊதுகுழலுன்னுஞ் சொல்லிச்
சொன்னாங்க, சொன்னாங்க!

ஆவேசங் கொண்டாங்க, ஓட்டும் போட்டாங்க
பிரபலமுன்னுஞ் சொல்லிகிட்டாங்க; யாரு, தானொரு
தமிழன்னு சொன்னாங்க சொன்னாங்க?!

இடுகையத் திருடிட்டாங்கன்னு சொல்லிச்
சொல்லுற ஒப்பாரி கேட்டு நாளாயிட்டுதுன்னுஞ்
சொன்னாங்க சொன்னாங்க!

தன்னன தன்னன தானத்தன்னன
தன்னன தன்னன தன்னன
தானாதீந்தன தானாதீந்தன!

சொன்னாங்க சொன்னாங்க
சொன்னாங்க சொன்னாங்க சொன்னாங்க
சொன்னாங்க சொன்னாங்க!

9 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

சொன்னாங்க சொன்னாங்க ...
கவுஜ நல்லா வந்ததுன்னு
என்னாங்க அட என்னாங்க
சொன்னதெல்லாம் என்னான்னு
சொல்லாமல் சொன்னீங்க!

பழமைபேசி said...

//கிருஷ்ணமூர்த்தி said... //

வணக்கம் ஐயா! தங்களுடைய எசப்பாட்டு நன்றாக உள்ளடு!!

vasu balaji said...

பதிவுலகம் ஏன் இப்படி ஆயிட்டுது.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சின்னப் பதிவர் நான்

குட்டிப் பதிவர் நான்

ஓரமா உட்காந்து பின்னூட்டம் போட்டேன்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

மாமன் ஒரு நாள் இடுகையைப் போட்டான்

ஆத்தி அது எதுக்கு

யோசனை பண்ணி

பார்த்தானாமா....

அவன் பின்னூட்டம் கூட போட்டானாமா...,

Anonymous said...

:)

தமிழ் said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

எம்.எம்.அப்துல்லா said...

எல்லாம் மாயை :)))

பழமைபேசி said...

//எம்.எம்.அப்துல்லா said...
எல்லாம் மாயை :)))
//

அஃகஃகா.... அண்ணன் சொன்னா சரியா இருக்கும்... மாயைதான்!

Post a Comment