Wednesday, February 2, 2011

காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்....




சூரியனோ சந்திரனோ யாரிவனோ
சட்டென சொல்லு
சேரப்பாண்டிய சூரனுமிவனா சொல்லு சொல்லு
சட்டென சொல்லு (2)

பாரடி பாரடி யாரடி இவனோ
பாய்கிற சிறுத்தையின் காலடி இவனோ
கூறடி கூறடி யாரடி இவனோ
கெட்டதைப் பட்டென சுட்டிடும் சிவனோ

ஏ பல்லேலக்கா பல்லேலக்கா சேலத்துக்கா மதுரைக்கா
மெட்ராஸுக்கா திருச்சிக்கா திருத்தணிக்கா
ஏ பல்லேலக்கா பல்லேலக்கா ஒட்டுமொத்த மக்களுக்கா
அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா

காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமா
ஓஹோ தாவணி பெண்களும்
தூதுவிடும் கண்களும் தொலைந்து போகுமா
நம்ம களத்துமேடு கம்மாக்கரை கரிசக்காடு
செம்மண் அள்ளித் தெளிக்கும் ரோடு

சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு ஆடிய மரத்தடி
படுபடுபடுவென போர்த்திய புல்வெளி
தொடத்தொடத்தொடத்தொட உடைகிற பனித்துளி
சுடச்சுடச்சுடச்சுட கிடைக்கிற இட்டிலி
தடதடதடவென அதிர்கிற ரயிலடி
கடகடகடவென கடக்கிற காவிரி
விறுவிறுவிறுவென மடிக்கிற வெற்றிலை
முறுமுறுமுறுவென முறுக்கிய மீசைகள்
மனதில் இருக்குது மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய்
(சூரியனோ) (2)
(ஏ பல்லேலக்கா)


சட்டென சொல்லு சட்டென சொல்லு
ஏலேலே கிராமத்துக் குடிசையிலே
கொஞ்ச காலம் தங்கிப் பாருலே
கூரையின் ஓட்டை விரிசல்வழி
நட்சத்திரம் எண்ணிப் பாருலே
கூவும் செலஃபோனின் நச்சரிப்பை அணைத்து
கொஞ்சம் சில்வண்டின் உச்சரிப்பை கேட்போம்
வெறும் காலில் செருப்பின்றி நடந்து
மண்ணோடு பேசிக்கொண்டு போவோம்
மழலைகள் ஆவோம்
ஆலமரத்துக்கு ஜடையை பின்னித்தான்
பூக்கள் வைக்கலாமே
ஊரோரம் அய்யனாரிடம் கத்தி வாங்கித்தான்
பென்சில் சீவலாமே
(ஏ பல்லேலக்கா)
(காவிரி ஆறும்)
சட்டென சொல்லு சட்டென சொல்லு

ஏலேலே அஞ்சறைப் பெட்டியிலே
ஆத்தாவோட ருசியிருக்கும்
அம்மியில் அரைச்சு ஆக்கி வச்ச
நாட்டுக்கோழி பட்டை கிளப்பும்
ஆடுமாடு மேல உள்ள பாசம்
வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்கச் சொல்லிக் கேட்கும்
வெறும்தண்ணி கேட்டா மோரு தரும் நேசம்
வெள்ளந்தி மனிதர்கள் வாசம் மண்ணு எங்கும் வீசும்
பாம்படக் கிழவியின் பச்சிலை மருந்துக்கு
பேயும் ஓடிப்போகும்
பங்காளி பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைக்கிற
அன்பு இங்கு வாழும்
(காவிரி ஆறும்)

சொல்கட்டு




இடம்: Miami University Collegiate Chorale under the direction of Jeremy Jones

Thursday, November 25, 2010

மழையும் மலையும்!!



கோவைக் குற்றாலம், திருமூர்த்தி பஞ்சலிங்க அருவி, மூணாறு... எனக்குத் தெரிஞ்சே ஒரு ஆயிரம் பேராவது இது போல ஏமாந்து இருப்பாய்ங்க. பொன்னாலம்மன் சோலையில இருக்கிற எங்க சின்னம்மாவிங்க தோட்டத்துக்கு போறப்பவெல்லாம், இது போல எதோ ஒரு சேதி வந்துட்டே இருக்கும்.

அரசும் கொஞ்சம் சிரத்தையோட இருக்கலாம்... அதுக்கும் மேல, போற நம்ம ஆட்கள், உள்ளூர்வாசிகளைக் கேட்டுட்டு மலை மேல போறது உசிதம்.. மலையும் மழையும் சுலுவுல ஆளை ஏமாத்திடும்னு கிராமத்து வெள்ளந்திக சொல்றது சும்மாவா, என்ன?!.

Monday, November 22, 2010

தோற்கிறேன்!

தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!
தெரிந்தே
நான் தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!!

பாதுகாப்பிசம்
நான் தெரிவு செய்த பாதை
நவீன உலகில்
எவரும் மதியாத பாதை...
தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!
தெரிந்தே
நான் தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!!

இருப்பின் உறுதி அவசியம் என்றேன்
விடுதலைக்கு எதிரானவனாய்
ஆக்கப்பட்டேன்;
தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!
தெரிந்தே
நான் தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!!

அடிப்படையே முதல் என்றேன்
முன்னேற்றத்தின் எதிரியாய்ச்
சித்தரிக்கப்பட்டேன்;
தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!
தெரிந்தே
நான் தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!!

வழுவைக் களையவல்லது பழைமை என்றேன்
புதுமையின் தடைக்கல்லென
முன்னிறுத்தப்பட்டேன்;
தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!
தெரிந்தே
நான் தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!!

ஆம்; தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!
தெரிந்தே
நான் தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!!
தாராளமயத்தின் தாக்கத்தில்
தாக்குப்பிடிக்காது
தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!

நான் இறந்த பிறகாவது
இருப்பிற்கான உறுதியின் அவசியம்
மெய்ப்படும் எனும் நினைப்பில்
தெரிந்தே தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!
தெரிந்தே
நான் தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!!

விதைப்பவன் வீழ்ந்திடினும்
விதைகள் எழும்!!

Sunday, November 7, 2010

நான் யார்?

  • அணுகுவதற்கு இலகுவாய் இருப்பது எளிமைக்கு முதல்படி என நினைப்பவன்.
  • பழையதன்றி, புதியன உயிர்ப்பதில்லை என்பதில் நம்பிக்கை கொண்டவன்.
  • பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதோர் எனும் அக்கப்போரில் நாட்டமற்றவன்.
  • தமிழில் நாட்டம் கொண்டவன். தமிழ் எழுத்துகள் கொண்டு, தமிழ்ச் சொற்களை எழுத முனைபவன்.
  • சுட்டுவதில் தன்னைச் சுட்டுவதற்கான காரணிகளும் உயிர்க்கிறது என்பதில் ஒப்புமை கொண்டவன்.
  • அறம் கட்டுடைக்கப்படும் போது, நீட்சிகள் எங்கோ, எதோ ஒரு புள்ளியில் கேட்டுக்கு வழி வகுக்கும் என்பதில் இசைந்தவன்.
  • ஒரு சூழலில் பெண்பால் உயர்வானது; பிறிதானதொரு சூழலில் ஆண்பால் உயர்வானது என்பதில் பற்றுடையவன். த்த்தம் தனித்தன்மையை அவை இரண்டும் கொண்டிருக்கின்றன என நம்புபவன்.
  • ஒட்டு மொத்த சமத்துவம் சாத்தியக் கூறுகள் அற்றது; பிரிந்த மணிகள் மாலையாகுமே தவிர, மாலையே மணியாவது இல என்பதில் உறுதி உடையவன்.
  • இணக்கமும் தனித்துவமும் வேறு வேறானவை. அதே வேளையில், அவை இரண்டும் உடலும் உயிரும் போன்றவை என ஏற்றுக்கொண்டவன்.
  • தமிழ் மொழி, பண்பாடு பேணுபவன் எவராயினும் அவர் தமிழர் என்பதில் பற்றுக் கொண்டவன்.
  • சாதிக் கணக்கெடுப்பில் உடன்பாடற்றவன்.
  • இட ஒதுக்கீடு என்பது படிப்படியாக இல்லாதிருத்தல் வேண்டும் என எண்ணுபவன்.
  • விவாதம் என்பது வினவுதலும் விடையளித்தலுமே அன்றி, வெட்டிப் பேசுதல் அன்று என எண்ணுபவன்.

Friday, October 15, 2010

தமிழ்நாட்டு மக்களுக்கு விடியல்!!!

சென்னை: தமிழக சட்டசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் இமெயில்கள் முகவரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதி எம்.எல்.ஏக்களுக்குமான இந்த அதிகாரப்பூர்வ இமெயில் முகவரிகளை தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை உருவாக்கிக் கொடுத்துள்ளது. இதை இன்று வீடியோ கான்பரன்சிங் மூலமாக முதல்வர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் முதல்வர் பேசுகையில், இந்த இமெயில் முகவரிகள் மூலம், மக்கள் பிரதிநிதிகள் மேலும் திறம்பட செயல்பட முடியும் என்று அவர் தெரிவித்தார்.

ஏன்யா, இது ஒரு செய்தின்னு போட்டு தமிழக மானத்தை வாங்குறீங்க?? மின்னஞ்சல் முகவரி கொடுக்கிறது ஒரு பெரிய குதிரைக் கொம்பாயா?? உலகம் எங்க இருக்கு? நாம எங்க இருக்கோம்??

Thursday, August 5, 2010

சேவல்

a

Wednesday, August 4, 2010

ஆக்கப்பூட்டு

ஆக்கப்பூட்டு என்பது, ஆங்கிலத்தில் knuckle joint எனும் சொல்லின் தமிழ்ச் சொல் ஆகும்.